

பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடம் காணொளி மூலம் நடைபெற்று வரும் விசாரணை தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி கைது செய்து செய்யப்பட்ட அமெரிக்காவில் உள்ள சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்தபடி காணொளி மூலம் மும்பை நீதிமன்றத்தில், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமுலம் அளித்து வருகிறார்.
கடந்த இரண்டு நாள்களாக வாக்கு மூலம் அளித்து வந்த நிலையில், இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரது வாக்கு மூலம் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.