பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடம் காணொளி மூலம் நடைபெற்று வரும் விசாரணை இன்று காலை மீண்டும் தொடங்கியது.
மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி கைது செய்து செய்யப்பட்ட அமெரிக்காவில் உள்ள சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்தபடி காணொளி மூலம் மும்பை நீதிமன்றத்தில், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமுலம் அளித்து வருகிறார்.
கடந்த சில நாள்களாக வாக்கு மூலம் அளித்து வந்த நிலையில், நேற்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரது வாக்கு மூலம் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஹெட்லியிடம் வாக்குமூலம் பதிவு செய்வது இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது.
முன்னதாக அவர் அளித்த வாக்குமூலத்தில், தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன் என்றும் இதுவரை 8 முறை இந்தியா வந்துள்ளேன் என கூறியுள்ளார். மேலும் 2008 நவம்பர் 26ம் தேதி மும்பை தாக்குதலுக்கு முன்பு 7 முறை உளவு பார்க்கவும், தாக்குதல் நடத்த பிறகு ஒரு முறையும் இந்தியா வந்ததாகவும் கூறியுள்ளார்.
தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஹேட்லி அமெரிக்காவில் 35 ஆண்டு கால சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


