

கொல்கத்தாவின் டன்லப் பகுதிக்கு அருகே இருந்த பிளாஸ்டிக் கிடங்கு ஒன்றில் இன்று முற்பகல் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன.
மக்கள் தொகை நெருக்கம் கொண்ட பகுதியில் பயங்கர தீ விபத்து நேரிட்டது அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது.
தீ விபத்துக்கான காரணமோ, உயிரிழப்பு குறித்தோ இதுவரை எந்த தகவலும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.