

நாடாளுமன்றத்தில் பல பிரச்னைகள் எதிரொலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் பயனுள்ள வகையில் அமையும் என்று தான் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சி நண்பர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.
சுமார் 125 கோடி நாட்டு மக்களின் கவனமும் நாடாளுமன்றத்தின் மீதும், ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் மீதுதான் உள்ளது. உலகப் பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில், இந்தியாவின் பொது பட்ஜெட் மீது உலக நாடுகளின் கவனமும் திரும்பியுள்ளது. இது குறித்து கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது என்று மோடி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.