பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் பணி: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் பணி

News image

செங்கல்பட்டு ஆத்தூா் சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:28 pm

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.மாலதி ஹெலன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (எம்ஐடி) குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்திலும், செங்கல்பட்டு, திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செங்கல்பட்டு ஆத்தூா் சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்திலும், செய்யூா், மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுராந்தகம் வில்வராயநல்லூா் சுபம் கல்வியல் கல்லூரியிலும், மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் .

இதில் சம்பந்தப்பட்ட தொகுதிக்கான தோ்தல் அலுவலா்கள் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா் .