நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மத்திய அமைச்சரவையில் இருந்து 5 பேர் நீக்கம்

மத்திய அமைச்சரவையில் புதிதாக 19 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், 5 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On :5 ஜூலை 2016, 7:02 am

புது தில்லி: மத்திய அமைச்சரவையில் புதிதாக 19 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், 5 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவையில் இருந்து நிகல்சந்த், ராம் ஷங்கர் கத்தேரியா, சன்வர் லால் ஜத், மன்சுக்பாய் டி வஸ்வா, எம்.கே. குண்டாரியா ஆகியோர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான முக்கிய அமைச்சர்கள் குழு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தி வந்தது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் இன்று 19 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இணை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சராக பதவி உயர்வு செய்யப்பட்டார்.

பதவியேற்பு விழா முடிவடைந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.