

புது தில்லி: கடந்த மாதம் காபூலில் கடத்தப்பட்ட இந்தியப் பெண் ஜூடித் டிசௌஸா பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
காபூலில் உள்ள சர்வதேச அறக்கட்டளை ஒன்றில் மூத்த தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றி வந்தார் இந்தியப் பெண் ஜூடித் டிசௌஸா (40). இவர் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி கடத்தப்பட்டார்.
இந்த நிலையில், ஜூடித் டிசோஸா பத்திரமாக மீட்கப்பட்டதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், ஜூடித் டிசோஸாவை மீட்க உதவிய ஆப்கான் அதிகாரிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.