பிகார் தேர்வு முறைகேடு விவகாரம்: முக்கியக் குற்றவாளி சிக்கினார்

பிகாரில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில், பிஷன் ராய் கல்லூரி செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியரான பச்சா ராய் கைது செய்யப்பட்டுள்ளார்.
Updated on
1 min read

பாட்னா: பிகாரில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில், பிஷன் ராய் கல்லூரி செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியரான பச்சா ராய் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிகாரில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள், தங்கள் எழுதிய பாடத்தின் பெயரைக் கூட ஒழுங்காக சொல்லத் தெரியாதது, ஆங்கில ஊடகத்தின் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து பிளஸ் 2 தேர்வில் முறைகேடு செய்து முதல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், முறைகேடு நடந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று வைஷாலி மாவட்டத்தில் உள்ள பக்வான்புர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

இவரது மகளின் பெயரும், முறைகேடு செய்து முதலிடம் பிடித்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com