மாநிலங்களவையில் 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் மசோதாக்கள்

சரக்கு சேவை வரி மசோதா உள்ளிட்ட 45 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளன. இதில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்களும் அடங்கும்.
மாநிலங்களவையில் 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் மசோதாக்கள்
Updated on
1 min read

புது தில்லி: சரக்கு சேவை வரி மசோதா உள்ளிட்ட 45 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளன. இதில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்களும் அடங்கும்.

சரக்கு சேவை வரி தொடர்பான அரசியல் சாசன 122-வது திருத்த மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேறிய நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.

இதுதவிர இடித்துரைப்பாளர்கள் பாதுகாப்பு மசோதா, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன.

மேலும், 1987 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

மொத்தத்தில் 45 மசோதாக்கள் உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக மாநிலங்களவையில் காத்திருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com