சண்டிகர்: சண்டிகரில் சர்வதேச யோகா தினக் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் யோகாவிற்கு உண்டு என்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தவர் ஒன்று திரண்டு யோகா தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சண்டிகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நம் நாட்டில் நீரிழிவு பிரச்னையை இன்று பலர் சந்தித்து வருகின்றனர்.
அடுத்து ஆண்டு ஐ.நா.,வின் அங்கீகாரம் பெற்ற நாளில் யோகா தினம் கொண்டாடப்படும் போது நீரிழிவு விஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
யோகா மூலம் நீரிழிவு நோயை முழுமையாக ஒழிக்க முடியாவிட்டாலும், நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு யோகா மூலம் ஒரு சிறிய அளவில் நிவாரணம் கொடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.