தேசிய புலனாய்வு துறையினர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அனுதாபியை நேற்று கைது செய்தனர்.
இராக், சிரியா, லிபியா நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் வகையில் பயங்கரவாத அமைப்பு (ஐஎஸ்ஐஎஸ்) செயல்பட்டு வருகிறது.
இந்த நாடுகளில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சார்பில் போரிடுவதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.
இந்தியாவிலும் சில இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர். சிலர் சேருவதற்காக பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்திய இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ப்பவர்களை கண்டுபிடித்து, மத்திய புலனாய்வு துறையினர் கைது செய்து வருகின்றனர். அதன்படி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக் அகம்மது என்ற ராஜவை தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர். அவர் தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


