மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ராஜஸ்தானில் ரூ.3000 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.3000 கோடி மதிப்புள்ள மாண்ட்ரக்ஸ் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2016, 10:15 am

DIN

புதுதில்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.3000 கோடி மதிப்புள்ள மாண்ட்ரக்ஸ் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தில்லியில் இன்று மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை ஆணை யத்தின் தலைவர் நஜீப் ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

கடந்த மாதம் 28-ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள 'மருதர் ட்ரிங்க்ஸ்' என்ற தனியார் நிறுவனத்தில், ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் புலனய்வு துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது ஒரு ரகசிய அறையில் , அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி மாண்ட்ரக்ஸ்  போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதன் தற்போதைய சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3000 கோடி ஆகும்.

இதை அதிக  அளவில் எடுத்துக் கொண்டால் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் உண்டு. இந்த மாத்திரைகள் அனைத்தும் மொசாம்பிக் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு கடத்தும் நோக்கத்துடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பான முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு நஜீப் ஷா தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.