
நாடெங்கும் இன்று விஜயதசமி (தசரா) கொண்டாடபடுவதால் அதை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ' மகிழ்ச்சி பொங்கும் இந்த தசரா நன்னாளில், என்னுடைய சக இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வாழ்த்து செய்தியில், ' அனைவருக்கு விஜயதசமி வாழ்த்துக்கள்' என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனனுடைய டிவிட்டர் பக்கத்தில், ' அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ' என்று பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.