மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தலாய்லாமாவை அனுமதித்தால் பிரச்சினைதான்: இந்தியாவை மிரட்டும் சீனா!

புத்தமத தலைவர் தலாய்லாமாவை அருணாசலபிரதேசத்தில் பயணம் செய்ய  அனுமதித்தால் இரு தரப்பு  உறவு கெட்டு விடும் என்று இந்தியாவை சீனா மிரட்டியுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2016, 3:17 pm

DIN

பெய்ஜிங்: புத்தமத தலைவர் தலாய்லாமாவை அருணாசலபிரதேசத்தில் பயணம் செய்ய  அனுமதித்தால் இரு தரப்பு  உறவு கெட்டு விடும் என்று இந்தியாவை சீனா மிரட்டியுள்ளது.

திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய் லாமா திபெத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அருணாசலபிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.இந்த பயணத்திற்கு இந்திய அனுமதி அளித்துள்ளது.  இந்த நிலையில் தலாய் லாமாவின் பயணம் சீனாவை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்து சீன வெளி விவகாரத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ காங் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

தலாய் லாமா பயணம் பற்றிய தகவலால் நாங்கள் மிகவும் கவலை கொண்டு உள்ளோம். அவரை அருணாசலபிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய அனுமதித்தால் இந்தியா-சீனா நாடுகள் இடையேயான உறவு மிகவும் மோசம் அடையும். இரு நாடுகளின் சர்வதேச எல்லையோர பகுதிகளில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படும்

இந்தியா 14வது முறையாக அருணாசலபிரதேசத்தில் பயணம் செய்ய தலாய்லாமாவிற்கு அழைப்பு விடுத்து உள்ளது. தலாய்லாமாவின் அருணாசலபிரதேச பயணத்தை சீனா தீர்க்கமாக எதிர்க்கிறது

இவ்வாறு லூ காங் தெரிவித்தார்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.