பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

உரி தாக்குதல்: மோடி-பிரணாப் சந்திப்பு!

உரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:18 pm

உரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் ஜெய்ஷ் இ  முகமது தீவிரவாத குழுவினர் நேற்று நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்தியா சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி மாளிகையில்  இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், 'பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.