அசாமில் விடுதலைப் புலிகள் இயக்கத் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை

சாமில் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத் தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அசாமில் விடுதலைப் புலிகள் இயக்கத் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை
Updated on
1 min read

திப்பு: அசாம் மாநிலம் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத் தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அங்லாங் மாவட்டத்தில் பந்திபத்தர் பகுதியில் காவலர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து நடத்திய தாக்குதலில் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய 2 தலைவர்கள் உள்பட 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

பாதுகாப்பு படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அங்லாங் மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com