பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பதான்கோட்டில் ஆயுதங்களுடன் புகுந்த நான்கு மர்ம நபர்கள்? தீவிர தேடுதல் வேட்டை!

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் ஆயுதங்களுடன் நான்கு மர்ம நபர்கள் புகுந்ததாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:40 am

DIN

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் ஆயுதங்களுடன் நான்கு மர்ம நபர்கள் புகுந்ததாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில், நேற்று ஆயுதம் தாங்கிய நான்கு மர்ம நபர்கள் நடமாடியதாக, உள்ளூர் கிராமவாசிகள் பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கொடுத்தனர்.  இதை அடுத்து அவர்களை தேடி தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியது.

இது பற்றி பதான்கோட் மாவட்ட காவல்துறை தலைவர் ராகேஷ் கவுஷல் கூறியதாவது:

நங்கள் சக்கி நதி மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில்  தேடுதல் வேட்டையை நடத்தினோம். இதுவரை எதுவும் முன்னேற்றம் இல்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. செவ்வாயன்று தொடங்கிய தேடுதல் வேட்டை இரவு முழுவதும் தொடர்ந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இந்த வருட துவக்கத்தில் ஜனவரி 2-ஆம்  தேதி பதான்கோட் ராணுவ விமான தளத்தில்  பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.