ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியத் தூதருக்கு அவமதிப்பு: பாகிஸ்தான் தூதருக்கு அழைப்பாணை

இந்தியத் தூதரை பாகிஸ்தான் அரசு அவமதித்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து, இதுதொடர்பாக கடும் ஆட்சேபம் தெரிவிக்க இந்தியாவில் உள்ள அந்நாட்டுத் தூதர் அப்துல் பாஸித்துக்கு மத்திய அரசு அழைப்பாணை அனுப்பியது.

News image
Updated On :7 செப்டம்பர் 2016, 7:53 pm

DIN

இந்தியத் தூதரை பாகிஸ்தான் அரசு அவமதித்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து, இதுதொடர்பாக கடும் ஆட்சேபம் தெரிவிக்க இந்தியாவில் உள்ள அந்நாட்டுத் தூதர் அப்துல் பாஸித்துக்கு மத்திய அரசு அழைப்பாணை அனுப்பியது.
கராச்சி வர்த்தக அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும், உரையாற்றுவதற்கும் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் உரையாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே எந்தக் காரணமும் தெரிவிக்காமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவிக்கும் வகையில், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் பாஸித்துக்கு மத்திய அரசு புதன்கிழமை அழைப்பாணை அனுப்பியது.
இந்த அழைப்பாணையை வெளியுறவுத் துறை (மேற்கு) செயலர் சுஜாதா மேத்தா அனுப்பி வைத்ததாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் பணிகளைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்று நம்புவதாக அப்துல் பாஸித்திடம் தெரிவிக்கப்பட்டது' என்றார்.
முன்னதாக, கராச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற கௌதம் பம்பாவாலே, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.