6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோனி விவகாரம்: ஆதார் விவரங்கள் சேகரிக்கும் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடு

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ஆதார் விவரங்கள் வெளியான விவகாரத்தை அடுத்து, ஆதார் விவரங்களை சேகரிக்கும் நிறுவனங்களுக்கு இந்தியப் பிரத்யேக அடையாள ஆணையம்

News image
Updated On :7 ஏப்ரல் 2017, 7:13 pm

DIN

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ஆதார் விவரங்கள் வெளியான விவகாரத்தை அடுத்து, ஆதார் விவரங்களை சேகரிக்கும் நிறுவனங்களுக்கு இந்தியப் பிரத்யேக அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆதார் விவரங்கள் இணையதளங்களில் வெளியாகின. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆதார் விவரங்களின் ரகசியத் தன்மை குறித்தும் கேள்வியெழுந்தது.
இதுதொடர்பான விசாரணையில், தோனியின் ஆதார் விவரங்களை சேகரித்த ஊழியர், அந்த விவரங்கள் அடங்கிய தாளுடன் சுயபடம் எடுத்துக் கொண்டதும், பின்னர் அதனை முகநூலில் பதிவிட்டிருப்பதும் தெரியவந்தது.
இதனை வைத்துக் கொண்டு மர்ம நபர்கள் சிலர், தோனியின் ஆதார் விவரங்களை இணையதளத்தில் கசியவிட்டிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது யு.ஐ.டி.ஏ.ஐ. கடும் நடவடிக்கை எடுத்தது.
கட்டுப்பாடுகள் விதிப்பு: இந்நிலையில், ஆதார் விவரங்களை சேகரிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக யுஐடிஏஐ தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஆதார் விவரங்களை சேகரிப்பது என்பது மிகவும் பொறுப்பான பணி என்பதுடன் ரகசியம் காக்க வேண்டிய பணியாகும். இந்தப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளை புறந்தள்ள வேண்டும். பிரபலமானவர்களின் ஆதார் விவரங்களை சேகரிக்கும்போது அவர்களுடன் சுயபடம் எடுத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
அதேபோல், தாங்கள் சேகரிக்கும் நபர்களின் ஆதார் விவரங்கள் எந்த வகையிலும் வெளியிடக் கூடாது என்பதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தோனி விவகாரத்தைப் பொருத்தவரை, சம்பந்தப்பட்ட ஊழியரின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட தவறு என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.