பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இருக்கை பிரச்சினையால் அரைமணி நேரம் தாமதமான ஏர் இந்தியா விமானம்: இது எம்.பிக்களின் 'சண்டை' சீசன்!

தனது தாயாரை இருக்கை மாற்றி அமரச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏர் இந்தியா விமானம் கிளம்புவதை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி ...

News image
Updated On :7 ஏப்ரல் 2017, 12:48 pm

கொல்கத்தா: தனது தாயாரை இருக்கை மாற்றி அமரச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏர் இந்தியா விமானம் கிளம்புவதை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி ஒருவர், அரைமணி நேரம் தாமதமாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி டோலா சென். இவர் இன்று கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு  ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் அவரது தாயாரும் பயணம் செய்தார். அவரது தாயாருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையானது, விமானத்திற்கான அவசர காலத்தில் வெளியே செல்லும் வழியில் அமைந்திருந்தது.

இதனால் அவரது தாயாரை இருக்கை மாற்றிக் கொள்ளுமாறு விமான பணிப்பெண்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பியான டோலா சென் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியாக அவரது தாயார் இருக்கை மாற்றி அமர செய்யப்பட்டார். இதன் காரணமாக விமானம் கிளம்புவது அரைமணி நேரம் தாமதமானது. இது பயணிகளிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது  

கடந்த மாதம் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்ல புனே விமான நிலையத்துக்கு வந்தார். அவர் கையில் ‘பிசினஸ்’ வகுப்பு டிக்கெட்   வைத்திருந்தார். ஆனால் அவர் பயணம் செய்வதற்கு ‘எகனாமி’ வகுப்பு இருக்கைகள் மட்டுமே வடிவமைக்கப்பட்ட விமானம் மட்டுமே இருந்தது. இதனால் அவர் எரிச்சலாகி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்கும் பொழுது  விமான நிலைய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். சமாதானம் செய்ய முயன்ற ஏர் இந்தியா மேலாளர் சுகுமார் (வயது 60) என்பவரை கெய்க்வாட் கடுமையாக தாக்கி தனது காலணியால் அடித்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இது தொடர் கதையாகி வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.