ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நீக்கப்பட்ட தடை: இனி சிறகு விரித்து பறக்கலாம் சிவசேனா எம்.பி!

ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ஒருவரை தனது காலணியால் தாக்கிய விவகாரத்தில் சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, ...

News image
Updated On :7 ஏப்ரல் 2017, 11:00 am

DIN

புதுதில்லி: ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ஒருவரை தனது காலணியால் தாக்கிய விவகாரத்தில் சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டதால் அவர் இனி  மீண்டும் விமானத்தில் பயணம் செய்யாலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்ல புனே விமான நிலையத்துக்கு வந்தார். அவர் கையில் ‘பிசினஸ்’ வகுப்பு டிக்கெட்   வைத்திருந்தார். ஆனால் அவர் பயணம் செய்வதற்கு ‘எகனாமி’ வகுப்பு இருக்கைகள் மட்டுமே வடிவமைக்கப்பட்ட விமானம் மட்டுமே இருந்தது. இதனால் அவர் எரிச்சலாகி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்கும் பொழுது  விமான நிலைய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். சமாதானம் செய்ய முயன்ற ஏர் இந்தியா மேலாளர் சுகுமார் (வயது 60) என்பவரை கெய்க்வாட் கடுமையாக தாக்கி தனது காலணியால் அடித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சிவசேனா கட்சித்தலைமையும் அவருக்கு உத்தரவிட்டது. அவரது செயலின் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் கெய்க்வாட் எம்.பி.யை தனது விமானத்தில் அனுமதிக்க தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. ஏர் இந்தியா நிறுவன உத்தரவை பின்பற்றி நாட்டின் அனைத்து விமான நிறுவனங்களும்  அவருக்கு தடை உத்தரவை அமல்படுத்தின.

இந்த விவகாரமானது நாடாளுமன்றத்திலும் புயலைக் கிளப்பியது. கெய்க்வாடின் தடையை நீக்க கோரி மத்திய விமான போக்குவரத்து துறைஅமைச்சர் கஜபதி ராஜுவை சிவசேனா எம்.பிக்கள் முற்றுகையிட்டு குரல் எழுப்பினர். ஆனால் முறையாக மன்னிப்பு தெரிவித்தால் மட்டுமே அவர் மீதான தடைநீக்கப்படுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்து விட்டார்.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவன மேலாளரை தாக்கியதற்கு வருத்தம் தெரிவித்து ரவீந்திர கெய்க்வாட் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து துறை கடிதம் எழுதியது. அதன் தொடர்ச்சியாக சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட்டுக்கு விதிக்கபப்ட்டிருந்த தடையை நீக்கி, தற்பொழுது ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.