ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சத்தீஸ்கர்: கணவரின் மரணம் குறித்த தகவலை தொலைக்காட்சியில் செய்தியாக வாசித்த பெண்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கணவரின் மரணம் குறித்த செய்தியை தொலைக்காட்சியில் அவசர செய்தியாக பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் துணிச்சலாக வாசித்துள்ளார்.

News image
Updated On :9 ஏப்ரல் 2017, 7:07 pm

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் கணவரின் மரணம் குறித்த செய்தியை தொலைக்காட்சியில் அவசர செய்தியாக பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் துணிச்சலாக வாசித்துள்ளார்.

ஐபிசி-24 என்னும் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் அவரின் பெயர் சுப்ரீத் கௌர் ஆகும். அந்த தொலைக்காட்சியில் சனிக்கிழமை காலையில் அவர் செய்தி வாசித்தபோது, மகசமுந்த் மாவட்டத்தில் நேரிட்ட கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்த செய்தி குறித்து உள்ளூர் நிருபர் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
அப்போது அந்த கார் தனது கணவர் ஹர்சத் கவ்டா சென்ற கார்தான் என்பதையும், உயிரிழந்த 3 பேரில் தனது கணவரும் ஒருவர் என்பதையும் அவர் தெரிந்து கொண்டார். எனினும், நிருபரின் தொலைபேசி பேட்டியை முழுவதும் எடுத்ததுடன், செய்தியையும் முழுவதும் வாசித்து நிறைவு செய்தார்.
செய்தி வாசித்து முடித்ததும் வெளியே வந்த அவர், அந்த விபத்தில் இறந்தது தனது கணவர்தான் என்பதை பிறரிடம் தெரிவித்தார். அப்போதுதான் தனது துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் கதறி அழுதார்.
அந்த தொலைக்காட்சியில் 8 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக கௌர் பணிபுரிகிறார்.
முதல்வர் பாராட்டு: இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் முதல்வர் ரமண் சிங் தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும், கணவரின் மரணம் குறித்த செய்தியை துணிச்சலுடன் வாசித்த கௌருக்கும் தனது பாராட்டை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.