ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எஸ்.பி.ஐயின்  புதிய விதிகளுக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சமீபத்தில் எஸ்.பி.ஐ வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள ஐந்து துணை வங்கிகளின் ஊழியர்களுக்கான புதிய நடத்தை விதிகளுக்கு தடை விதித்து ...

News image
Updated On :12 ஏப்ரல் 2017, 3:50 pm

DIN

சென்னை: சமீபத்தில் எஸ்.பி.ஐ வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள ஐந்து துணை வங்கிகளின் ஊழியர்களுக்கான புதிய நடத்தை விதிகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐயுடன் ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதரபாத், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் உள்ளிட்ட ஐந்து துணை வங்கிகள்  சமீபத்தில் ஒன்றிணைக்கப்பட்டன.அப்படி இணைக்கப்பட்ட துணை வங்கிகளின் ஊழியர்களுக்கு புதிய நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதன் காரணமாக ஓய்வூதிய பலன்கள், ஊதிய விகிதம் மற்றும் பணி மூப்பு  உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, 17 ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது எஸ்.பி.ஐயின் புதிய விதிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு எஸ்.பி.ஐக்கு நோட்டிஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.