சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காங். முன்னாள் அமைச்சர் அகிலேஷ் தாஸ் குப்தா காலமானார்: மோடி இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அகிலேஷ் தாஸ் குப்தா உடல்நலக் குறைவு காரணமாக காலமானர். குப்தா மறைவிற்கு பிரதமர்

News image
Updated On :12 ஏப்ரல் 2017, 8:09 am

DIN

புதுதில்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அகிலேஷ் தாஸ் குப்தா உடல்நலக் குறைவு காரணமாக காலமானர். குப்தா மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் பாபு பானரசி தாஸின் மகனுமான அகிலேஷ் தாஸ் குப்தா நெஞ்சுவலி காரணமாக இன்று காலமானார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் ஆட்சியில் அகிலேஷ் தாஸ் குப்தா மத்திய இரும்புத் துறை இணையமைச்சராக இருந்தார். லக்னோ நகர மேயராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்.

தாஸ் குப்தாவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இரங்கல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர் அகிலேஷ் தாஸ் குப்தாவின் மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது அற்பணிப்புமிக்க பொதுவாழ்க்கை நீண்ட காலம் நினைவுகூறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.