ஸ்ரீநகர் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு எண்ணிக்கை தொடங்கியது: பரூக் அப்துல்லா தொடர்ந்து முன்னிலை
ஸ்ரீநகர் மக்களவை இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பரூக் அப்துல்லா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதாக தகவல்


ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் மக்களவை இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பரூக் அப்துல்லா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது.
அதன் வாக்குப்பதிவின்போது பெருமளவில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும், அதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக 7.14 சதவீதம் வாக்குகளே பதிவாகின.
இந்தச் சூழலில், தேர்தல் வன்முறை காரணமாக ஸ்ரீநகரில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து, வியாழக்கிழமை மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
சோய்பாக் என்னும் பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடி அருகே நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தைத் தவிர, வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.
எனினும், இந்த வாக்குப் பதிவில் வெறும் 2 சதவீத வாக்குகளே பதிவானது.
இந்நிலையில், ஸ்ரீநகர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று சனிக்கிழமை (ஏப். 15) காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இதில், ஜம்மு-காஷ்மீா் மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா 986 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை இருந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...