டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இரட்டை இலைக்கு பேரம்: டிடிவி தினகரன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்துள்ளது- தில்லி காவல்துறை

இரட்டை இலைச் சின்னத்தை தங்கள் அணிக்கே வழங்கக் கூறி பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்திருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:18 pm

DIN

புது தில்லி: இரட்டை இலைச் சின்னத்தை தங்கள் அணிக்கே வழங்கக் கூறி பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்திருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை தில்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அப்போது, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தர உதவுவதாக தான் கூறியிருப்பதையும், அதற்கு, டிடிவி தினகரனிடம் ரூ.60 கோடி அளவுக்கு பேரம் பேசியதாக சுகேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், அவரது அறையில் இருந்து ரூ.1.30 கோடியையும், இரண்டு கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தற்போது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரா சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

இது குறித்து தில்லி காவல்துறையினர் கூறுகையில், சுகேஷ் சந்திராவிடம் டிடிவி தினகரன் பேசியதற்கான ஆடியோ பதிவுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடப்பதாகவும், சுகேஷ் சந்திரா, தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாரையாவது தொடர்பு கொண்டு பேசியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட தினகரனும், பன்னீர்செல்வம் அணியும் இரட்டை இலைச் சின்னத்தை சொந்தம் கொண்டாடியதால், தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது.

இதையடுத்து ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருந்த இடைத் தேர்தலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில்தான், இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தர டிடிவி தினகரன் 60 கோடி அளவுக்கு இடைத்தரகர் என்று கூறப்படும் சுகேஷ் சந்திராவிடம் பேரம் பேசியதாக, தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.