தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காஷ்மீரில் முன்னாள் ராணுவ அதிகாரி, வழக்குரைஞர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் முன்னாள் ராணுவ அதிகாரி, வழக்குரைஞர் ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2017, 5:19 am

DIN

ஸ்ரீநகர்:  காஷ்மீரில் முன்னாள் ராணுவ அதிகாரி, வழக்குரைஞர் ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் உள்ள பிஞ்சோரா கிராமத்தில் வசித்து வருபவர் வழக்குரைஞர் இம்தியாஸ் அகமது கான். இவர் முன்னாள் அரசு வழக்குரைஞராக பணியாற்றியவர்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இம்தியாஸ் அகமது கான் தொழுகைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த இம்தியாஸ் அகமது கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோன்று பந்திபோரா மாவட்டத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி அப்துல் ரஷீத் பராய் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.