ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கருத்து சுதந்திரம் மீது நேரடி, மறைமுக தாக்குதல்: கோபால கிருஷ்ண காந்தி குற்றச்சாட்டு

நமது நாட்டில் கருத்து சுதந்திரத்தின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது என்று குடியரசு துணைத்

News image
Updated On :3 ஆகஸ்ட் 2017, 7:22 pm

DIN

நமது நாட்டில் கருத்து சுதந்திரத்தின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது என்று குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு கோபால கிருஷ்ண காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
அரசமைப்புச் சட்டப்படி நாட்டு மக்கள் அனைவருக்கும் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம், விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இப்போது நமது சுதந்திரத்தின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தாக்குதல் நிகழ்த்தப்படுகின்றன. பொது நலன் கருதி செயல்படும் அமைப்புகளுக்கும் இதுபோன்ற நெருக்கடிகள் அதிகம் உள்ளன.
சகிப்பின்மை, எதிர்க் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத நிலை ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துவிட்டது.
மகாத்மா காந்தியடிகளின் 70-வது நினைவு தினத்தை இன்னும் 6 மாதத்தில் அனுசரிக்க இருக்கிறோம். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தேசப் பிரிவினையால் ஏற்பட்ட மிகப்பெரிய காயம். முன்பு நிலத்தை அடிப்படையாகக் கொண்டு தேசத்தில் பிரிவினைகள் நிகழ்ந்தன.
ஆனால், இப்போது அதைவிட மோசமாக மக்களை மனதளவில் பிரிக்கும் பிரிவினைவாதம் தலை தூக்கியுள்ளது. எனவே, ஜாதி, மதவாதத்தை நாம் ஒருபோதும் முன்னிறுத்தக் கூடாது.
சுதந்திரம், அனைவருக்கும் ஒரே நீதி, சமத்துவம் ஆகியவை நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியக் கொள்கைகளாக இருந்தன. ஆனால், நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், நாம் போராடிப் பெற்ற சுதந்திரம், நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக பெரும் சவால் எழுந்துள்ளது.
நமது நாட்டில் தேர்தல் ஆணையம் மிகவும் சிறப்பாகவும், சுதந்திரமாகவும் தேர்தல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் நாம் அனைவரும் தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக இருக்கிறோமா? எவ்வித அச்சமுமின்றி வாழ்ந்து வருகிறோமா? அச்சமின்றி கருத்துகளைத் தெரிவிக்க முடிகிறதா? அரசின் குற்றம், குறைகளை உயர் பொறுப்புகளில் இருப்பவர்களிடம் தைரியமாக எடுத்துச் செல்ல முடிகிறதா? தெருமுனைகளில் அரசின் செயல்பாடுகள் தைரியமாக விமர்சிக்க முடிகிறதா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாட்டில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்கள் நமது சுற்றுச்சூழலையும், ஆறுகளையும் கெடுக்கவில்லை என்று நம்மால் உறுதியாகக் கூற முடியுமா? குடியரசுத் தலைவர் பதவி என்பதும், குடியரசு துணைத் தலைவர் பதவி என்பதும் நமது ஆட்சி முறையை உயிரோட்டமாக வைத்திருக்கக் கூடிய பதவியாகும். இந்தியாவில் சுதந்திரமும், சமூக நீதியும், மக்களிடையே உள்ள ஒருமைப்பாடும்தான் மிக உயர்ந்தது. அதனைக் காக்க வேண்டும் என்று நமக்குள் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம்தான் நமது தேசத்தில் அமைதி நிலவும் என்று அந்தக் கடிதத்தில் கோபால கிருஷ்ண காந்தி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.