டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குஜராத் சுற்றுப்பயணத்தில் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல்!

குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.   

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:35 pm

DIN

அகமதாபாத்: குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.   

சமீபத்திய பெருமழையின் காரணமாக குஜராத் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார் .

அந்த வகையில் பனாஸ்காந்தா பகுதியில் பார்வையிடுவதற்காக சென்ற ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ராகுலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் அவருக்கு கருப்பு கொடி காட்டப்பட்டு உள்ளது. பின்னர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசப்பட்டு உள்ளது. இதனால் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் ராகுல் காந்திக்கு  எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. எதிர்ப்பு இருந்த போதிலும் விரைவில் ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தொடர்வார் எனவும் கூறப்படுகிறது. தாக்குதல்காரர்கள் பிரதமர் மோடி என கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

ராகுலின் கார் மீதான தாக்குதலை போலீசும் உறுதி செய்து உள்ளது. இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.