ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஜம்மு-காஷ்மீர்: சோபூர் பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் சோபூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், லஷ்கர் அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2017, 2:22 am

DIN


ஜம்மு-காஷ்மீர் சோபூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், லஷ்கர் அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபூரில், ஒரு கட்டடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீஸார், துணை ராணுவப் படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் கூட்டு நடவடிக்கையாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கட்டடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர்.

இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிசூடு நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் போலீஸார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.