தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2017, 5:26 am

புல்வாமா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் சம்போராவில் நேற்றிரவு அவந்திபொரா போலீஸ், ஆர்ஆர் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் கூட்டாக நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு ராணுவ வீரர்கள் அவர்களை விரட்டி துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது, இரண்டும் தீவிரவாதிகள் ராணுவத்தின் படியில் சிக்கினர். அதில் ஒருவனை வீரர்கள் சுட்டுக் கொன்ற நிலையில், மற்றொருவன் இருட்டைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளான். தப்பிச் சென்ற தீவிரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகின்றன.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின், அபு இஸ்மாயில் குழுவை சேர்ந்த உமர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து, புல்வாமா மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.