பல துறைகளின் தலைவர்கள் பங்குபெறும் 15-ஆவது கருத்தரங்கம் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் போது ரிலையன்ஸ் நிறுவன அதிபரும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
எனது வாழ்க்கையில் பணம் பெரிய பொருட்டே இல்லை. நான் எப்போதும் அதுகுறித்து கவலைப்பட்டதில்லை. பணம் என்பதைக் கொண்டு எனது வியாபாரத்தை பெருக்கும் ஒரு பொருளாகவே இப்போது வரை பயன்படுத்தி வருகிறேன்.
நான் செய்யும் தொழிலை விரிவுபடுத்த மட்டுமே அது எனக்கு உதவியது. மேலும் அதனை விரிவுபடுத்தவும், மேற்கொண்டு அதில் எழும் புதிய சவால்களைச் சந்திப்பதற்கும், வியாபாரம் தொடர்பான அச்சுறுத்தல்களை களைவதற்கும் பணம் உதவியுள்ளது.
ஆனால் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக நான் எப்போதும் பணத்தை நம்பி இல்லை. இன்னும் சொல்லப்போனால் எனது பள்ளிப்பருவம் முதலே நான் எனது சட்டைப்பையில் பணம் வைத்துக்கொள்வது இல்லை. அந்த வாடிக்கை இன்று வரை தொடர்கிறது. என்னிடம் கிரெடிட் கார்டுகளும் கிடையாது.
இப்போது வரை நான் செய்யும் செலவுகளுக்கு என்னுடன் இருப்பவர் தான் பணம் செலுத்தி வருகிறார். ஒருவேளை அதுகூட நான் இவ்வளவு பணம் சேமித்தமைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நகைச்சுவையுடன் தனது பேச்சை முடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


