பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

வெற்றியோ தோல்வியோ உண்மையின் பக்கம் நிற்போம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூளுரை! 

தேர்தல் அரசியலில் வெற்றியோ தோல்வியோ, நாம் எப்போதும்  உண்மையின் பக்கம் நிற்போம் என்று  காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளில், அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 12:49 pm IST

புதுதில்லி: தேர்தல் அரசியலில் வெற்றியோ தோல்வியோ, நாம் எப்போதும்  உண்மையின் பக்கம் நிற்போம் என்று  காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளில், அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட தினத்தினை நினைவு கூறும் விதமாக தில்லியில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டமானது தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தினை காப்பதும், ஒவ்வொரு குடிமக்களின் எதிர்காலத்துக்காகப் போராடுவதும் நமது கடமை.

காங்கிரஸ் கட்சி மகத்தான வரலாறு கொண்டது. நமது செயல்பாட்டின் மையப் புள்ளியாக எப்போதும் இருப்பது உண்மைதான். அதை நோக்கிய நமது போராட்டம் தொடர்ந்தபடி இருக்கும்.

நமது நாட்டினை வஞ்சகம் ஒரு வலையாக சூழ்ந்துள்ளது. ஒரு பொய்யினை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தலாம் எனும் அடிப்படையில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் தேர்தல் அரசியலில் வெற்றியோ தோல்வியோ, நாம் எப்போதும்  உண்மையின் பக்கம் நிற்போம்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.