புதுதில்லி: தேர்தல் அரசியலில் வெற்றியோ தோல்வியோ, நாம் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்போம் என்று காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளில், அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட தினத்தினை நினைவு கூறும் விதமாக தில்லியில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டமானது தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தினை காப்பதும், ஒவ்வொரு குடிமக்களின் எதிர்காலத்துக்காகப் போராடுவதும் நமது கடமை.
காங்கிரஸ் கட்சி மகத்தான வரலாறு கொண்டது. நமது செயல்பாட்டின் மையப் புள்ளியாக எப்போதும் இருப்பது உண்மைதான். அதை நோக்கிய நமது போராட்டம் தொடர்ந்தபடி இருக்கும்.
நமது நாட்டினை வஞ்சகம் ஒரு வலையாக சூழ்ந்துள்ளது. ஒரு பொய்யினை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தலாம் எனும் அடிப்படையில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் தேர்தல் அரசியலில் வெற்றியோ தோல்வியோ, நாம் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்போம்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 53 வேட்பாளா்கள் டிபாசிட் இழப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பெரியார் பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் வேலை!

வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: கைதானவா் நீதிமன்றத்தில் ஆஜா்

நெல்லை அருகே பெண் தற்கொலை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


