புதுதில்லி: இனிமேல் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில்வே டிக்கெட்டுகளுக்கு சேவை வரி ரத்து செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.அதில் அவர் தெரிவித்ததாவது:
ரயில்வே துறை:
* ரயில்வேயில் பாதுகாப்பு, சீர்திருத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை
* ரயில்வே துறை திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூ. 55 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
* இந்த ஆண்டில் 3500 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைப்பு
* வரும் ஆண்டில் 9 மாநிலங்களுடன் சேர்ந்து 70 புதிய ரயில் திட்டங்கள் நிறைவேற்றம்
* 2019-க்குள் ரயில்பெட்டிகளில் பசுமைக் கழிவறை உருவாக்கப்படும்
* 2020 ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகளில் ஆளில்லாத ரயில்வே க்ராஸிங் இல்லாத நிலை உருவாக்கப்படும்.
* நகரமயமாக்கலுக்கு வெகுவாக உதவும் மெட்ரோ ரயில் சேவைக்கு என புதிய கொள்கை உருவாக்கப்படும். அதன்மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு
* நாடு முழுவதும் 500 ரயில்வே நிலையங்கள் ஊனமுற்றவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்படும்.
* இனிமேல் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில்வே டிக்கெட்டுகளுக்கு சேவை வரி ரத்து