மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜம்மு எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பெண் பிஎஸ்எஃப் படையினரால் சுட்டுக் கொலை

சர்வதேச எல்லையில், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பெண்ணை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று இரவு சுட்டுக் கொன்றனர்.

Updated On :24 பிப்ரவரி 2017, 4:57 am


ஜம்மு: சர்வதேச எல்லையில், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பெண்ணை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று இரவு சுட்டுக் கொன்றனர்.

அக்னூர் அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. எல்லைப் பாதுகாப்புப் படையினரின் 33வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் பக்வாரி எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்திய எல்லைக்குள் ஒருவர் ஊடுருவுவதைப் பார்த்தனர்.

ஊடுருவலை நிறுத்தி திரும்பிச் செல்லுமாறு பாதுகாப்புப் படையினர் பல முறை எச்சரித்தும், அதையும் மீறி அந்த நபர் எல்லைக்குள் ஊடுருவியதால், வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஊடுருவல் நடந்த பகுதி இருட்டாக இருந்ததால், நபர் ஆணா பெண்ணா என்பதை அறிய முடியவில்லை என்றும், உடலை கைப்பற்றிய போதுதான், அது பெண் என்று தெரிய வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.