தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க கோரும் மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

விரைவில் நடைபெற இருக்கும் ஐந்து மாநில தேர்தலை மனதில் கொண்டு மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிய மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

News image
Updated On :6 ஜனவரி 2017, 6:54 am

புதுதில்லி: விரைவில் நடைபெற இருக்கும் ஐந்து மாநில தேர்தலை மனதில் கொண்டு மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிய மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில் அவர் வரும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை ஐந்து மாநிலங் களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அந்த நேரத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தால் அது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக இருக்கும். எனவே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை ஏப்ரல் மாதம் வரை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவானது தலைமை நீதிபதி ஜே .எஸ்.கேஹர், நீதிபதிகள் ஏன்.வி.ரமணா மற்றும் டி.ஒய் சந்திரசூட் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. ஆனால் இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு சாதாரணமாக விசாரணைக்கு வரும் போது விசாரிப்பதாக கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.