ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வைகுண்ட ஏகாதசி: திருப்பதிக்குப் போகும் திட்டமிருந்தால் இதைப் படியுங்கள்!

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருப்பதியில் முக்கியப் பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2017, 10:25 am

DIN


திருப்பதி: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருப்பதியில் முக்கியப் பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவார்கள் என்பதால், தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, பொது தரிசன பக்தர்களின் வசதிக்காக, ஜனவரி 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, முக்கியப் பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடைபாதை வழியாக திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கான திவ்ய தரசினமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவருமே, நாளை பொது தரிசனம் மூலமே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.