திருப்பதி: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருப்பதியில் முக்கியப் பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவார்கள் என்பதால், தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பொது தரிசன பக்தர்களின் வசதிக்காக, ஜனவரி 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, முக்கியப் பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடைபாதை வழியாக திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கான திவ்ய தரசினமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவருமே, நாளை பொது தரிசனம் மூலமே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.