ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்படுமா? - நிதியமைச்சகம் பதில்!

ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும் என்ற மாநில முதலைமைச்சர்களின் குழு பரிந்துரை தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை...
ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்படுமா? - நிதியமைச்சகம் பதில்!
Published on
Updated on
1 min read

புதுதில்லி: ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும் என்ற மாநில முதலைமைச்சர்களின் குழு பரிந்துரை தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் பொருட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் முதலமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மோடியிடம் செவ்வாய்க்கிழமை அன்று அளிக்கப்பட்டது.  

அந்த அறிக்கையில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும், கடன் அட்டை மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் வரிவிதிப்பு ரத்து, டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளுக்கு வரிச்சலுகை மற்றும் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.1000 மானியம் உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிப்பு என்ற விஷயம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. எனவே இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சகம் மாநில முதலைமைச்சர்களின் குழு அளித்த பரிந்துரை அறிக்கையானது கவனமாக பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகு முடிவு எடுக்கப்படும். தற்போது இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com