லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வுக்கு தமிழகத்தை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் கேரளா மனு! 

முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆய்வுக்கு தமிழகத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கேரளா புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2017, 4:36 pm IST

புதுதில்லி: முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆய்வுக்கு தமிழகத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கேரளா புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை  விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் நிறைய வழக்குகளை தொடர்ந்துள்ளன. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணைப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தங்களுக்குதான் தார்மீக உரிமை உண்டு எனவும், எனவே அதற்காக அணைப்பகுதியில் இணைப்பு சாலையான வல்லக்கடவு- முல்லைப்பெரியாறு சாலை வழியாக பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவின் இந்த மனுவுக்குத்தான் கேரளா உச்சநீதி மன்றத்தில் இடைமனு ஓன்றை தாக்கல் செய்துள்ளது. அதில்தான் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆய்வுக்கு தமிழகத்தை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது   

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு  தார்மீக உரிமை கிடையாது. அணைப்பகுதியில் இணைப்பு சாலையான வல்லக்கடவு- முல்லைப்பெரியாறு சாலை சாதராணமான

பயன்பாட்டுக்காகவும், சிறிய இலகு ரக வாகனங்களை ஓட்டி செல்வது போலவும்தான் அமைக்கப்பட்டுள்ளது.  எனவே அதன்   வழியாக கனரக பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது.

எனவே முல்லை பெரியாறு பகுதியில் தமிழகம் எந்தவிதமான பாதுகாப்பு  மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்று கேரளா தனது மனுவில் தெரிவித்துள்ளது        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.