எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு

விரைவில் நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி  வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2017, 7:05 am

DIN

புதுதில்லி: விரைவில் நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி  வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியா காந்தி இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைந்த ஜனதா தளம், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் துணை ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி  வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசப்பிதா மகாதமா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி இதற்கு முன்பு மேற்கு வங்க   மாநில ஆளுநர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.