அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நான் மக்களின் வேட்பாளர்: கோபாலகிருஷ்ண காந்தி

நான் என்னை மக்களின் வேட்பாளராக கருதுகிறேன் என குடியரசுத் துணைத் தலைவருக்கான எதிர்கட்சி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்தார்.

News image
Updated On :12 ஜூலை 2017, 11:47 am

DIN

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான எதிர்கட்சிகளின் ஒன்றினைந்த வேட்பாளராக காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, மேற்குவங்கத்தின் ஆளுநராக 2004 முதல் 2009 வரை இவர் செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் குறித்து கோபாலகிஷ்ண காந்தி கூறியதாவது:

என்னைப் பற்றி பேசுவதற்கு நான் என்றும் விரும்பியதில்லை. ஆனால், தற்போது இந்தியாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை (தீவிரவாத பிரச்னை) குறித்து விவாதிக்க நிறைய உள்ளது. இதானால் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. 

என்னை குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்ததற்கு அனைத்து எதிர்கட்சிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. நான் ஒரு சாதராண இந்தியக் குடிமகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். எனவே என்னை மக்களின் வேட்பாளராகவே கருதுகிறேன்.

நம் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து வருத்தமாக உள்ளது. அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதுவே என் முதல் இலக்கு என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.