டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வெங்கய்ய நாயுடு ராஜிநாமா: ஸ்மிருதி இரானி, தோமருக்கு கூடுதல் பொறுப்பு

மத்திய அமைச்சர் பதவியை வெங்கய்ய நாயுடு ராஜிநாமா செய்ததை அடுத்து அவர் வகித்த பொறுப்புகள் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நரேந்திர சிங் தோமர் ஆகியோரிடம் அளிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:27 pm

DIN

மத்திய அமைச்சர் பதவியை வெங்கய்ய நாயுடு ராஜிநாமா செய்ததை அடுத்து அவர் வகித்த பொறுப்புகள் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நரேந்திர சிங் தோமர் ஆகியோரிடம் அளிக்கப்பட்டுள்ளன.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து வெங்கய்ய நாயுடு மத்திய அமைச்சர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். அவர் செய்தி, ஒலிபரப்பு, நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில், அவர் வகித்து வந்த செய்தி, ஒலிபரப்புத் துறை, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. சமூக நீதித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பொறுப்பை ஸ்மிருதி இரானி செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியுடன் கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) தெரிவித்துள்ளார்.
கூடுதல் பொறுப்பை ஏற்ற பிறகு அத்துறை இணையமைச்சர்களை ஸ்மிருதி இரானி சந்தித்துப் பேசினார். முன்னதாக, வெங்கய்ய நாயுடுவையும் அவர் சந்தித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.