மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இந்திய-சீன எல்லையில் படைகள் குவிப்பு: அமெரிக்கா கவலை

இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2017, 7:33 pm

DIN

இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
சிக்கிம் மாநிலம் டோகாலாம் பகுதியை உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு சாலை அமைக்க மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதையடுத்து, அப்பகுதியில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை நிலை நிறுத்தியுள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
இணைந்து செயல்பட வேண்டும்: இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹிதர் நவர்ட், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எல்லையில் இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை நிறுத்தியுள்ளது குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது. பதற்றத்தை தணிக்கும் வகையில் இருதரப்பும் பேச்சு நடத்தும் என்று அமெரிக்கா நம்புகிறது. இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம். இதற்காக அந்த இரு நாடுகளின் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
ஆயுத பலத்தை அதிகரிக்கிறது சீனா: இதனிடையே, சீனா ராணுவ பலத்தை அதிகரித்து வருவது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் (செனட்) ராணுவ ஆயுதப் பிரிவுக் குழுவுக்கு, அமெரிக்க விமானப்படை தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் பால் செல்வா தகவல் அளித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: பொருளாதார வளர்ச்சியால் கிடைந்த பயன்கள் மூலம் சீன ராணுவம் தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. அதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் தனக்குத் தேவையானதை சாதிக்க சீனா முயற்சிக்கிறது. சீனாவின் ஆயுத பலத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவும் தனது ஆயுதத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
டோகாலாம் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் சீனா, அடுத்த கட்டமாக வடகிழக்கு மாநிலங்களுக்கும், இந்தியாவின் மற்ற பகுதிக்கும் இடையிலான தரைவழித் தொடர்பை தூண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்பது இந்தியத் தரப்பின் கவலையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.