காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கொல்கத்தாவிலிருந்து அந்தமான் நோக்கிச் சென்ற சரக்கு கப்பல் நீரில் மூழ்கி விபத்து!

கொல்கத்தாவிலிருந்து அந்தமான் நோக்கிச் சென்ற ஐ.டி.சி பாந்தர் என்னும் சரக்கு கப்பல் அந்தமான் அருகே நீரில் மூழ்கியது

Published On :

கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து அந்தமான் நோக்கிச் சென்ற ஐ.டி.சி பாந்தர் என்னும் சரக்கு கப்பல் அந்தமான் அருகே நீரில் மூழ்கியது

கொல்கத்தா துறைமுகத்திலிருந்து அந்தமான் தீவுகள் நோக்கிச் சென்ற 'ஐ.டி.சி பாந்தர்' என்னும் சரக்கு கப்பல் இன்று காலை அந்தமான் அருகே 125 நாட்டிக்கல் மைல் தொலைவில் நீரில் மூழ்கியது

கப்பலிலிருந்து 11 ஊழியர்களும் உயிர் காக்கும் கவசங்களை அணிந்து கொண்டு கடலில் குதித்து தப்பியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரில் மூழ்கிய கப்பலில் 29 கண்டெய்னர்கள் இருந்ததாக தெரிய வருகிறது. மீட்பு பணிகளுக்காக கடலோர காவல் படையானது விரைந்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாமென்று தெரிய வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.