சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

3 ஆண்டுகளில் ரூ.72,000 கோடி கருப்புப் பணம் கண்டறியப்பட்டது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் வருமான வரித் துறை நடத்திய சோதனைகளில், மொத்தம் ரூ.71,941 கோடி கணக்கில் காட்டப்படாத தொகை கண்டறியப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:30 pm

DIN

கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் வருமான வரித் துறை நடத்திய சோதனைகளில், மொத்தம் ரூ.71,941 கோடி கணக்கில் காட்டப்படாத தொகை கண்டறியப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை மத்திய நிதித் துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், நிகழாண்டு (2017) பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கண்டறியப்பட்ட கணக்கில் காட்டப்படாத ரொக்கம் மற்றும் சொத்துகள் ஆகியவை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 3 ஆண்டுகளில் 2,027 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகளுக்குப் பிறகு, கணக்கில் காட்டப்படாத தொகை ரூ.36,051 கோடி கண்டறியப்பட்டது. இதுதவிர, ரூ.2,890 கோடி மதிப்புள்ள, கணக்கில் காட்டப்படாத சொத்துகள் கண்டறியப்பட்டன.
இதே காலகட்டத்தில், வருமான வரித் துறையினர் நடத்திய ஆய்வுகளில், ரூ.33,000 கோடி கருப்புப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட அடுத்த இரு மாதங்களில் மட்டும் வருமான வரித் துறையினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகளுக்கு பிறகு கணக்கில் காட்டப்படாத தொகை ரூ.5,400 கோடி கண்டறியப்பட்டது. அவற்றில் புதிய ரூபாய் நோட்டுகளும் இடம்பெற்றிருந்தன. இதுதவிர, மொத்தம் 303.367 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, 400-க்கும் மேற்பட்ட வழக்குகள், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.