திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற வேண்டும்: இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சீனா நிபந்தனை

சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் நிறுத்தியிருக்கும் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சீனா நிபந்தனை விதித்துள்ளது

News image
Updated On :24 ஜூலை 2017, 8:48 pm

DIN

சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் நிறுத்தியிருக்கும் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சீனா நிபந்தனை விதித்துள்ளது.
இதுதொடர்பாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வூ கியான் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தனது பாதுகாப்பு நலன்களைக் காக்க சீனா எந்த விலையையும் கொடுக்கும். இந்த விவகாரத்தில், இந்தியா அதிர்ஷ்டத்தையோ அல்லது மாயையும் நம்பியிருக்கக் கூடாது. சீனப் பகுதிக்குள் ஊடுருவி இந்தியா தவறு செய்துள்ளது. அந்த தவறையும், அத்துமீறி மிரட்டல்கள் விடுத்திருப்பதையும் சரி செய்வதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும்' என்றார்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் லூ ஹாங் செய்தியாளர்களிடம் பேசியபோது, தங்கள் நாட்டுக்கு வருகை தரவுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் இருதரப்பு விவகாரம் குறித்து பேச்சு நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதை சூசகமாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இரு நாட்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களும் பரஸ்பரம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவிக்க இயலாது. ஆனால், கடந்த கால பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டின்போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக சீன பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்திய பகுதிக்குள் அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று சீனா மீண்டும் வலியுறுத்துகிறது. இருதரப்புக்கும் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, சீனா முன்வைக்கும் நிபந்தனை இது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அப்பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிக்கிம் எல்லையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 2 மாதத்துக்கும் மேலாக பதற்றம் நிலவுகிறது.பெய்ஜிங், ஜூலை 24: சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் நிறுத்தியிருக்கும் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சீனா நிபந்தனை விதித்துள்ளது.
இதுதொடர்பாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வூ கியான் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தனது பாதுகாப்பு நலன்களைக் காக்க சீனா எந்த விலையையும் கொடுக்கும். இந்த விவகாரத்தில், இந்தியா அதிர்ஷ்டத்தையோ அல்லது மாயையும் நம்பியிருக்கக் கூடாது. சீனப் பகுதிக்குள் ஊடுருவி இந்தியா தவறு செய்துள்ளது. அந்த தவறையும், அத்துமீறி மிரட்டல்கள் விடுத்திருப்பதையும் சரி செய்வதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும்' என்றார்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் லூ ஹாங் செய்தியாளர்களிடம் பேசியபோது, தங்கள் நாட்டுக்கு வருகை தரவுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் இருதரப்பு விவகாரம் குறித்து பேச்சு நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதை சூசகமாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இரு நாட்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களும் பரஸ்பரம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவிக்க இயலாது. ஆனால், கடந்த கால பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டின்போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக சீன பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்திய பகுதிக்குள் அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று சீனா மீண்டும் வலியுறுத்துகிறது. இருதரப்புக்கும் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, சீனா முன்வைக்கும் நிபந்தனை இது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அப்பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிக்கிம் எல்லையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 2 மாதத்துக்கும் மேலாக பதற்றம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.