உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.
தில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
ராணுவத்தை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. ராணுவத் தளவாடங்களை இந்தியாவில் உருவாக்கும் திட்டம் சிறப்பானது. இதன் பலன்கள் அடுத்த சில ஆண்டுகளில் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
அண்டை நாடுகள் உள்ளிட்ட எந்த வெளிநாடுகளுடன் ஏற்படும் போரையும், உள்நாட்டு தீவிரவாதிகளுடனான அச்சுறுத்தலையும் முழு அளவில் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது.
ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது என்று நான் கூறுவது எந்த நாட்டுக்கும் எதிரான கருத்து அல்ல. எனினும், எந்த விதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ராணுவத்துக்கு புதிய வீரர்களை சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராணுவத்துக்காக தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு முழுமையாகப் பயிற்சியளித்து சிறப்பாக தயார் செய்வதற்கு 3 ஆண்டுகள் வரை ஆகிறது என்றார் அவர்.
"இந்திய-சீன எல்லையில் கடந்த 40 ஆண்டுகளில் ஒரு தோட்டா கூட பாயவில்லை' என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில், ராணுவ தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


