இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் 10 உறுப்பினர் குழு நாளை ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக அக்கட்சியினர் புதன்கிழமை கூடி ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.

News image
Updated On :12 ஜூன் 2017, 8:51 pm

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக அக்கட்சியினர் புதன்கிழமை கூடி ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தவது குறித்து முடிவு செய்வதற்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அக்கட்சியின் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, சமாஜவாதி கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதீஷ் சந்திர மிஸ்ரா, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் டெரக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரஃபுல் படேல் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் தில்லியில் புதன்கிழமை முதல்முறையாக கூடி குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பிலான பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிக்க உள்ளனர்.
இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என தகவல்கள் உலாவுகின்றன.
இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடனும், எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜக சார்பில் 3 பேர் கொண்ட குழுவை அக்கட்சின் தேசியத் தலைவர் அமித் ஷா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.