ராகுலின் வெளிநாடு பயணம் நியாயமானது: காங்கிரஸ்
ராகுல் காந்தியின் வெளிநாடு பயணம் நியாயமானதுதான்; அவர் தனது குடும்பத்தினரைச் சந்திக்க வெளிநாடு செல்வதில் என்ன தவறு உள்ளது'' என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.


ராகுல் காந்தியின் வெளிநாடு பயணம் நியாயமானதுதான்; அவர் தனது குடும்பத்தினரைச் சந்திக்க வெளிநாடு செல்வதில் என்ன தவறு உள்ளது'' என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி திடீரென செவ்வாய்க்கிழமை வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
தனது 47ஆவது பிறந்த நாளை, இத்தாலியில் இருக்கும் அவரது பாட்டி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடவே, வெளிநாடு பயணம் சென்றதாக கூறப்படுகிறது.
ராகுலின் வெளிநாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் ராஜ் பப்பர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், 'ராகுல் காந்தி தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான வெளிநாட்டுப் பயணம் குறித்து சுட்டுரை மூலம் தெரிவித்திருந்தார்; அதுபோல், பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது யார்-யாரை சந்திக்கிறார் என்பது குறித்து தெரிவிக்க வேண்டியது அவரது பணியாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மக்கள் தொடர்புப் பிரிவு தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், 'ராகுல் காந்தி தனது பாட்டியை சந்திக்க சென்றுள்ளார்; குடும்பத்தில் இருக்கும் முதியவர்கள் மீது அக்கறை செலுத்தும் நமது பழைய கலாசாரத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். ராகுல் காந்தியின் கடமை அல்லது சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவு அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் குற்றம் தெரிவிக்க முடியாது' எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...